• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகாவலி அபிவிருத்தித் திட்டம் - இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்

இலங்கை

இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது.

மகாவலி ஆற்றிலிருந்து அதிகப்படியான நீரை இலங்கையின் வறண்ட வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், விவசாயத் துறையின் மீள்தன்மையை வலுப்படுத்துவதன் மூலமும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலமும் வடமத்திய மாகாணத்தில் 35,600க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.

இந்தத் திட்டத்திற்கான கூட்டு இணை நிதியளிப்பு முயற்சியை ADB வழிநடத்துகிறது.

இது ADB நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதியிலிருந்து $60 மில்லியனையும், விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியிலிருந்து $42 மில்லியனையும் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply