TamilsGuide

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் ஒரு விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

நாடு தழுவிய 608 பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.

மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment