TamilsGuide

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றாத பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நான்கு வாகனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை தொடரும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment