• Welcome to TamilsGuide
செய்திகள் 1

களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையிலீடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

Leave a Reply