அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு
இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளது.
IMF ஆல் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மீளாய்வினை பற்றி விவாதிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
மேலும் ஒப்புதல் வழங்குவதற்காக IMF நிர்வாகக் குழு டிசம்பர் 15 அன்று முதலில் கூட திட்டமிடப்பட்டது.
எனினும், விரைவான நிதியுதவிக்கான இலங்கையின் கோரிக்கையைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.






















