• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொள்கலன் கையளுகையில் 2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் புதிய சாதனை

இலங்கை

2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த கொள்கலன் கையாளுதலைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டில் கொள்கலன் கையாளுகை 8,290,000ஐ எட்டியதாக துறைமுக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக ஆணையத்தால் இயக்கப்படும் ஜெயா கொள்கலன் முனையம் (JCT), கிழக்கு கொள்கலன் முனையம் (ECT), சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தெற்காசிய நுழைவாயில் முனையம் (SAGT) மற்றும் இந்தியாவின் அதானி குழுமத்தால் இயக்கப்படும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இந்த எண்ணிக்கை 6% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

ஏனெனில் 2024 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் 7,700,000 கொள்களன்களை மாத்திரமே கையாண்டது. 

2026 ஆம் ஆண்டில் கொழும்பு ஒரு மைய துறைமுகமாக அதன் நிலையை வலுப்படுத்த, போக்குவரத்து மற்றும் தளவாட வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் (WCT) ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், கொழும்பு துறைமுகம் கணிசமாக அதிக அளவிலான கொள்கலன்களைக் கையாள முடியும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாக பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​பல முன்னணி உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் கொழும்பின் செயல்பாடுகளில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல நிறுவனங்கள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply