மத்திய அமெரிக்கா விமானப் பாதையில் ராணுவ பதற்றம் - விமானங்களுக்குப் புதிய எச்சரிக்கை
"இராணுவ நடவடிக்கைகள்" காரணமாக மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க வான்பரப்பில் விமானங்களை இயக்கும்போது "எச்சரிக்கையுடன் இருக்குமாறு" அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
தொடர்பு சாதனங்கள் மற்றும் பூகோள வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது ஒரு "ஆபத்தான சூழலாக" அமையக்கூடும் என மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தொடர்ச்சியான செய்திகள் மூலம் எச்சரித்துள்ளது.
"மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, பனாமா, பொகோட்டா, கயாகுவில் மற்றும் மசாட்லான் பெருங்கடல் விமானப் பிராந்தியங்கள் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலுக்கு உட்பட்ட வான்பரப்புகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் அடுத்த 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி அமெரிக்க விசேட படையினர் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதலில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.























