கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.
வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் மட்டக்களப்ப கல்லடி பாலத்தில் இருந்து பேரணியாக சென்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்தொழில் நிரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்திருததுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அத்துடன் இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உரிய திணைக்களத்தினை
தலைவருக்கும் கொண்டுசெல்லப்பட்டதுடன் அதற்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்தொழில் நிரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தார்.






















