• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் அதன் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார். 

தற்போதைய அரசாங்கத்தால் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் செய்து வரும் பழிவாங்கல்கள், அகௌரவங்கள் தொடர்பிலும், இனவாதத்தை தூண்டும் விவதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் விதம் தொடர்பிலும் இங்கு அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் நிமித்தம் தேரரிடம் ஆசீகளையும் ஆலோசனைகளையும் பெற்றார்.
 

Leave a Reply