பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு
தென் கரோலினா மாநில பல்கலைக்கழக விடுதியில் இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் குறித்தோ அல்லது காயமடைந்தவர் தொரடர்பிலோ பல்கலைக்கழக அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






















