மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.
கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு எனவே இதனைக் கருத்திற் கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவல்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






















