• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓமான் கடற்பரப்பில் தாக்குதல் - எண்ணெய் தாங்கிக் கப்பலில் 4 பேர் காயம்

ஓமானின் மசந்தம் (Musandam) கடற்கரையிலிருந்து சுமார் 5 கடற்படை மைல் தொலைவில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 20 பேரைக் கொண்ட அதன் முழுமையான பணியாளர் குழுவும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஸ்கைலைட்' என அழைக்கப்படும் இந்தக் கப்பலில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான 'பலாவு' நாட்டின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓமான் கடற்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கடல்சார் பாதுகாப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஓமான் பிரதான மத்தியஸ்த நாடாகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply