எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு? ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க
இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தப் போர் நிலைமை இலங்கை மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், தனி மனிதர்களாக அதை எம்மால் வெல்ல முடியாது. எனவே ஒரு நாடாக இதைச் சமாளிக்க ஒரு திட்டம் வகுக்கவுள்ளோம்.
அமைதியான உலகத்திற்கான சர்வதேச அர்ப்பணிப்பு மூலமே இதனை எம்மால் அதை அடைய முடியும் மத்திய கிழக்கில் நடக்கும் போர் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கும் சுற்றுலாத் துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழில்களும் பாதிக்கப்படும்.
இந்தப் போர்ச்சூழலால் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களால் மக்கள் இதுபோன்ற சூழ்நிலையில் வருத்தப்படுவது இயல்பானது .
வார்த்தைகள் மற்றும் உண்மைகளால் மட்டும் சமூகத்தை நிலைப்படுத்த முடியாது, நடைமுறையில் மக்கள் நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே அதனை நம்ப வைக்க முடியும்.தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து
இதேபோன்ற பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது, மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் முந்தைய சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை, தற்போதைய போர் நிலைமையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நாங்கள் அதனையும் வெற்றிக்கொள்வோம்.“ என்றார்.
இந்த போர்ச் சூழலினால் இலங்கையின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும், தனிமைப்பட்ட ரீதியில் அதிலிருந்து எம்மால் மீள முடியாது எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
ஒரு நாடாக இதனை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அமைதியான உலகிற்காக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பின் ஊடாக மாத்திரமே அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்குத் தடைகள் ஏற்படக்கூடும் எனவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பெரும் சிக்கல் உருவாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறை, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கும் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்தப் போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக இவ்வாறானதொரு சூழலில் மக்கள் அச்சமடைவது இயல்பான நிலை எனவும் குறிப்பிட்டார்.























