2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
இலங்கை
2026 பெப்ரவரி மாதத்தில் மொத்தம் 279,328 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் (SLTDA) தெரிவித்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இதுவாகும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2025 பெப்ரவரியுடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் சுமார் 16.2% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை 2026 பெப்ரவரி 12 அன்று நிகழ்ந்தது – அந்த நாளில் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.
2026 பெப்ரவரி மாதத்தில், இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.
இது தவிர ஐக்கிய இராச்சியம் (30,788 சுற்றுலாப் பயணிகள்), ரஷ்யா (23,099 சுற்றுலாப் பயணிகள்) மற்றும் ஜெர்மனி (22,566 சுற்றுலாப் பயணிகள்) ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.























