ஈரான் போரால் டாக்சிக் ரிலீஸ் ஒத்திவைப்பு - புதிய தேதி இதுதான்
சினிமா
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்சிக்'. 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்து இருந்தது.
இதனிடையே இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 'டாக்சிக்' படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் ஜூன் 4-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






















