வளைகுடாவை பாதுகாக்க உக்ரைனிடம் உதவி கோரும் அமெரிக்கா
ஈரானிய ஆளில்லா வானூர்திகளுக்கு எதிராக, வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா, யுக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார்.
யுக்ரைனின் நட்பு நாடுகள் தங்களைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும், இது தொடர்பாக "அமெரிக்கத் தரப்பிலிருந்து கோரிக்கைகள்" வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வராத நிலையில் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. ஈரானிய உச்ச தலைவர் காமெனி, இஸ்ரேல் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் கொல்லப்பட்டதை அடுத்து வளைகுடாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















