• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு

இலங்கை

யாழில், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய,  அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றபட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் வாகன சாரதியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply