9 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்..
சினிமா
மாஸான ஹீரோ படங்களுக்கு எப்படி வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறதோ, அதே போல் சிறந்த கதைக்களத்துடன் வெளிவரும் படங்களுக்கும் தமிழ்நாட்டில் எப்போதும் வரவேற்பு இருந்து வந்துள்ளது.
அப்படி, சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள படம்தான் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடிப்பில் மிரட்டியிருந்தார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி இதுவரை உலகளவில் ரூ. 44.5 கோடி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இனி வரும் நாட்களிலும் தாய் கிழவியின் வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.






















