மின் கட்டண திருத்தம்- இறுதி முடிவு மே 9
இலங்கை
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதி முடிவு மே 9 அன்று பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
அதற்கு அமைவாக, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு மீதான கருத்துகளைப் பெறுவதற்கான பொது கலந்தாய்வுக் கூட்டம் ஆணைக்குழுவினால் இன்று முதல் மே 6 வரை நடத்தப்படும்.
மின்சாரக் கட்டணங்களை மீண்டும் உயர்த்துவது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்) நிறுவனம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்காக, தனது திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளது.
அண்மைய எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் இந்தத் திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.






















