நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி
இலங்கை
தேசிய மக்கள் சக்தி (NPP) தனது மூத்த தலைவர்களின் பங்கேற்புடன், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் NPP வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர திசாநாயக்க, மே 1 ஆம் திகதி காலையில் நுவரெலியாவில் நடைபெறும் மே தினப் பேரணியிலும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மகாரகமவில் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்வார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய இரத்தினபுரியில் நடைபெறும் மே தினப் பேரணியில் கலந்துகொள்ள உள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா களுத்துறை, மாத்தறை, தங்கல்லை ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்பார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்பார்.
அமைச்சர் விஜித் ஹேரத் உட்பட ஏனைய கே.டி. லால்காந்த, சுனில் ஹந்துநெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க, அனுர கருணாதிலக, மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் நாடு முழுவதிலும் கூடுதலான இடங்களில் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.






















