நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை
இலங்கை
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் , தனக்கு எதிராக உடனடியாகத் தலைமைத்துவப் போட்டியை ஆரம்பிக்க வேண்டாம் எனத் தனது கட்சியின் முக்கியத் தலைவரான ஆண்டி பர்ன்ஹாமுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர், அங்கிருந்தவாறு செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய சூழலில் நாட்டில் ஒரு தலைமைத்துவப் போட்டி உருவாவது நாட்டிற்கு “தீங்கான விஷயமாக” அமையும் எனக் குறிப்பிட்டதுடன், தனக்கு எதிராக வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மீள உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் போட்டியிடுகிறார்.
இதேவேளை, ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால், அவர் உடனடியாகப் பிரதமர் பதவிக்குக் கீர் ஸ்டார்மருக்கு எதிராகப் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.






















