• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் இலங்கை மாணவர் சக நாட்டவரால் குத்திக் கொ*லை

இலங்கை

ஜப்பானின் சிபா மாகாணத்தின் நகரேயாமா (Nagareyama) நகரில், 21 வயதுடைய சக நாட்டவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இலங்கை நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் சர்வதேச மாணவர்கள் என்றும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்ததாக ஜப்பானின் என்.எச்.கே (NHK) செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (11) காலை சுமார் 10:20 மணியளவில் ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேக நபர் 119 என்ற எண்ணை அழைத்தார். 

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்தில் இருந்த 18 வயதுடைய இலங்கை நாட்டு சர்வதேச மாணவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

தனது சக நாட்டவரைக் கத்தியால் குத்தியதை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் அறிமுகமானவர்கள் என்று கூறிய பொலிஸார், இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதே இந்த மோதலுக்கு காரணம் என்றும் குறிப்பிட்டனர்.

Leave a Reply