மூன்றாம் பாடசாலை தவணை ஆரம்பம் தொடர்பான அப்டேட்
இலங்கை
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜனவரி 24 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























