• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

இலங்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த பதில் தொடர்பான உத்தரவை பிப்ரவரி 21 ஆம் திகதி அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் இலங்கை அரசாங்க நிதியை முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஐந்து பிரதிவாதிகள் மீது லஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிடா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை மாற்றி தொடர முடியாது என்று கூறி, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் முன்பு ஆரம்ப ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்த நிலையில் ஆரம்ப ஆட்சேபனைகளுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையம் இன்று எழுத்துப்பூர்வ பதில்களை சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply