Hollywood queen ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் பிரியங்கா சோப்ரா
சினிமா
இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது ஹாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் உலகளாவிய நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது அடுத்த சர்வதேச ப்ராஜெக்ட் குறித்த ஒரு அதிரடி தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ஹாலிவுட்டின் டாப் நட்சத்திரமும், உலகப் புகழ்பெற்ற நடிகையுமான ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற உள்ளார். இந்த உற்சாகமான செய்தியை பிரியங்கா சோப்ராவே அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், இந்த கூட்டணி ஒரு முழு நீளத் திரைப்படமா, வெப் தொடரா அல்லது ஏதேனும் சர்வதேச பிராண்டிற்கான விளம்பரப் படமா என்பது குறித்த விபரங்களை அவர் தற்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளார். இது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் இரு பெரும் ஆளுமைகளான ஏஞ்சலினா ஜோலியும், பிரியங்கா சோப்ராவும் ஒரே திரையில் ஒன்றாகத் தோன்றவிருப்பது, சர்வதேச சினிமா வட்டாரத்திலும், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் தற்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.























