திருமதி தயாபரராசா சாரதாதேவி
மறைவு - 14 JAN 2026
யாழ். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரராசா சாரதாதேவி அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.சின்னையா(கிளாக்கர்), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.கதிரவேலு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு.தயாபரராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி(சுவிஸ்), தர்சினி(சுவிஸ்), காலஞ்சென்ற கிருபானந்தி(தனுஷா) மற்றும் பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அருமை தாயாரும்,
அருள்செல்வம், சிவகுமார், ஆனந்தகௌரி ஆகியோரின் அருமை மாமியாரும்,
நிஜானா, நிஜந்தன், சீமோன், சமீனா, சனாதனி, திரிவேதிகா, ஜோதீஸ்வர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, திரு.சண்முகநாதன், திரு.இராமேஸ்வரன், திரு.சச்சிதானந்தம், திரு.சாம்பசிவம், கேதாரகௌரி மற்றும் தனபாலதேவி, காலஞ்சென்றவர்களான சோதிமலர், சுகந்தமலர், சந்திரவதனா ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திரு.இராசரட்ணம், பத்துமாவதி, திரு.கந்தையா, திரு.சிவஞானசேகரம் மற்றும் திரு. தனபாலசந்திரன், காலஞ்சென்றவர்களான திரு.மனோகரன், தங்கமுத்து, திரு. பாலசுந்தரம் ஆகியோர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2026 திங்கட்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் அவரது இல்லத்தில் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து, தெகிவளை/ கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Sri Lanka - மகன்/ மகள்கள்
Mobile : +94763093775






















Leave a Reply